வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நூல் வெளியீட்டு விழா அழைப்பு



அன்பார்ந்த நண்பர்களே! நேயர்களே!

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய நூறு ஸ்தோத்திரங்கள் கொண்ட சிவானந்த லஹரீ பக்தி இலக்கியத்தை சிவகளிப் பேரலை என்ற பெயரில் தமிழ்க் கவிதை நூலாக மொழிபெயர்த்து, விளக்கவுரையுடன் வடித்துள்ளேன். அதில் ஒரு கவிதை இதோ:


ஆயிரம் தெய்வமுண்டு அற்பமாம் வரம்தர
ஆழ்கனவிலும் நினையேன் அவர்தம் தொழுகை
அரிபதுமன் அருகிருந்தும் அறியவொண்ணா சாம்பனே
அரிதாம் நின்திருவடி தொழுதலை வேண்டுவனே!

அந்த நூலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கியுள்ளனர்.

அந்நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 29.09.2012 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.




அனைவரும் வருகை தந்து நூல் வெளியீட்டு விழாவின் வெற்றிக்கு உறுதுணை புரியுமாறு வேண்டுகிறேன்.

அனைவரும் வருக! சிவ ஆனந்தத்தைப் பருக!

அன்புடன் பத்மன் 

2 கருத்துகள்:

  1. சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. ஓம்
    புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற அன்புடன் வாழ்த்துகிறேன்.
    மேலும் மேலும் புதிய பல படைப்புகளும் தோன்றவும் அவை வெற்றியுடன் வெளியீடு பெறவும் என்னுடைய வாழ்த்துகள்.
    ஆசியுடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

    பதிலளிநீக்கு