திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஊடகர்கள்



யாருக்காகவோ வாள் சுழற்றுகிறோம்

சுழற்றலில் எங்கள் தலைகளும் வீழ்ந்துபடுகின்றன.


எய்பவர் கைகளில் அம்புகள் நாங்கள்

எளிய இலக்குகளையே குறிவைத்துத் துளைக்கிறோம்.


வலிய இலக்குகளுடன் எங்கள் தலைகள்மோதும்போது

வலிகள் அனைத்தும் எங்கள் உடம்புக்குத்தான்.


கருத்து மோதல்களுக்காக மடிந்து படுகிறோம் ஒருசிலர்

கன்னி தண்ணி பணத்துக்கும் மடிந்துவிடுகிறோம்.




உண்மையில் எங்கள் எசமானர்கள் பொதுசனங்கள்

உழலும் தொழில் நடைமுறையில் அவரிடமில்லை கரிசனங்கள்.


    

-    பத்மன்

1 கருத்து:

  1. ஊடகர்கள் பற்றி தற்ேபாது தவறான கருத்துக்கள் ெவளியிடங்களில் பரவி வருகின்றது. குைறகைள சுட்டிக்காட்டும் ஊடகங்களில், தமிழ்நாட்டில் ஒருசில ஊடகங்கள் தவிர மற்ற ெபரும்பாலான ஊடகங்கள், ெசய்தியாளர்களுக்கு சம்பளம் ஏதும் தருவதில்ைல. இது ஊழலுக்கு வழடிவகுக்கும் என்பது ஊடக முதலாளிகளுக்கு ெதரியாதா?

    பதிலளிநீக்கு