ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நடைமுறை மனிதர்கள்


 

எங்கள் பரந்த மனப்பான்மை பகைமை
நாங்கள் பரப்புவது பரஸ்பரம் சந்தேகம்
எங்கள் ஒற்றுமை இனவேற்றுமை
எங்கள் பொதுநோக்கம் சுயநலம்.




எரிந்த கரியினுள் 
செறிந்த நெருப்பாய்
நாங்கள் நீட்டும்
நேசக் கரங்களினுள்ளும்
நாச நரம்புகள்.


நாங்கள் கண்டுபிடித்த 
அமைதிச் சாதனம்
அணுகுண்டு ஆயுதம்
இதற்கொரு முழுவாய்ப்பளித்தால்
இனியொரு பிரச்சனையில்லை
எங்கும் அமைதிதான்.... 
மரண அமைதி.



எங்களுக்குப் பிடித்தவை
மதபோதைகள்தான்,
மதபோதனைகள் அல்ல.

எனவேதான் நாங்கள்
கடவுளுக்குக் கட்சிகட்டி,
மனிதனுக்குப் பாடைகட்டுகிறோம்.

                              - பத்மன்

1 கருத்து: