செவ்வாய், 16 அக்டோபர், 2012

நன்றி இறைவா!




கடினமாய் உழைத்துத்தான்
குடும்பத்தைக் காப்பாற்றும்
கஷ்டமான சூழலில்
கடவுளே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
களைப்பு என்னிடம் கழன்றுவிட்டது.


பதவிகளைப் பிடித்து
பணம்அதிகம் பண்ணத்தெரியாத
பத்தாம்பசலி மனிதனாய்
பகவானே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
குணம் என்னிடம் குடிகொண்டுள்ளது.



திறமைகள் மிகுந்திருந்தும்
திருப்பங்களைக் காணாமல்
திக்கற்று நின்றிடவே
தெய்வமே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
முயற்சி என்னிடம் முளைத்துவருகிறது.



பாமாலைபாடி பூமாலைசூட்டி
பலவிதமாய் துதித்தும்
பலனேதும் கிடைக்காதவனாய்
பரம்பொருளே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
பக்தி என்னிடம் பற்றிக்கொண்டுள்ளது.



-    பத்மன்

2 கருத்துகள்:

  1. முதலில் உள்ளது மிகவும் அருமை ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அன்பு பத்மனுக்கு

    நன்றி உனக்கு, நல்ல கவிதைக்கு

    என்றும் நன்புடன்
    பார்த்தா

    பதிலளிநீக்கு