திங்கள், 15 செப்டம்பர், 2014

வீழவில்லை பாரதி!


 
 

தேடித் தமிழ்தினம் வளர்த்து - பலர்

                போற்றக் கவிதைகள் யாத்து - தேகம்

வாடினும் தேசத்துக் குழைத்து - பிறர்

                வாழப் பலசெயல்கள் புரிந்து - யாவரும்

கூடி சுதந்திரம் எய்திட - எய்தபின்

                வாழும் முறைகளும் மொழிந்து - பல

வேடிக்கை மனிதரை மாற்றிட - புவியில்

                தோன்றிய பாரதி தெய்வம் தானே?

-          பத்மன்


1 கருத்து: