தேடித் தமிழ்தினம் வளர்த்து - பலர்
போற்றக் கவிதைகள் யாத்து - தேகம்
வாடினும் தேசத்துக் குழைத்து - பிறர்
வாழப் பலசெயல்கள் புரிந்து - யாவரும்
கூடி சுதந்திரம் எய்திட - எய்தபின்
வாழும் முறைகளும் மொழிந்து - பல
வேடிக்கை மனிதரை மாற்றிட - புவியில்
தோன்றிய பாரதி தெய்வம் தானே?
-
பத்மன்
அருமை! உண்மைதான்!
பதிலளிநீக்கு