ஞாயிறு, 21 ஜூலை, 2013

முள் கிரீடம்



 திறமை எனக்கு முள்கிரீடம்
 தீரா ரணமே தருகிறது
 பெருமை எனக்குப் பரிதாபம்
 பேசாத் துணையாய் வருகிறது


           

 வெறுமை எனது பொக்கிஷமாம்
 வேண்டாப் பரிசாய் குவிகிறது

 அருமை எனது அடையாளம்

 அடையா இலக்கோ நீள்கிறது


 
  கடமை எனக்கு உயிர்மூச்சு

  கழுத்தை அதுவே நெரிக்கிறது

  உழைப்பே எனது உற்சாகம்

  உதவா உறவாய் இருக்கிறது.

  -    பத்மன்

7 கருத்துகள்:

  1. உங்கள் மனநிலை புரிகின்றது. உங்கள் கவிதையின் அர்த்தம் புரிகின்றது. எல்லாம் கடந்து போகும்....

    பதிலளிநீக்கு
  2. கவிதை உமக்கு சுமைதாங்கி
    கவலை அதுவே தீர்க்கிறது ---- நம் நாட்டில் பாரதிக்கே இந்த நிலை ...பத்மனுக்கு

    பதிலளிநீக்கு
  3. முள்கிரீடம் மனதை தைத்தது ... -

    பதிலளிநீக்கு