பாட்டாலே
வையத்தைப் பாலிக்க வந்ததோர்
தலைவன் – தங்கத் தலைவன் – தம்
ஏட்டாலே தீயவர்
கூட்டத்தை ஓட்டிய
புலவன் சிங்கப் புலவன் – அவன்
பதந்தொட்டு
பண்பான நெறிபட்டு என்றுமே
வாழ்வோம் – மண்ணில் வாழ்வோம் – மிக்க
இடர்பட்டு
நொந்தாலும் இன்னலால் வெந்தாலும்
வீழோம் – நாங்கள் வீழோம் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
நாட்டின்மேல்
பாசத்தை நன்றாக வைத்திடச்
செய்தான் – நம்மைச் செய்தான் – நம்ம
வீட்டிலும்
வெளியிலும் பெண்களைப் போற்றிடச்
செய்தான் – நன்மை செய்தான் – அவன்
பேச்சாலும்
மூச்சாலும் தமிழ்மொழி ஓங்கிடச்
செய்தான் – தவம் செய்தான் – அவன்
எழுத்தாலும்
கருத்தாலும் தீமைகள் நீங்கிடச்
செய்தான் – விதி செய்தான் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
தீரன் – கவிதை வீரன் – நல்ல
ஆக்கத்தில்
நம்மவர் சிந்தை செலுத்திய
ஆர்யன் – சுத்த வீர்யன் – கெட்ட
வேற்றுமை பேசியே
கெடுதிகள் செய்வோர்க்கு
காலன் – காக்கும் வேலன் – மக்கள்
ஒற்றுமை ஓங்கவே
தம்வாழ்வைத் தந்திட்ட
நேசன் – சக்தி தாசன் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
- பத்மன்
பாட்டுக்கொரு புலவனுக்கு
பதிலளிநீக்குஅவன் நினைவு நாளில்
அருமையான கவிமாலை சூட்டி
வந்தனம் செய்தது
மனம் கவர்ந்தது
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும் பாரதி அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்...
அருமை... அருமை...
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
கவிதை அருமை.தங்கள் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு